Published : 16 May 2020 07:13 AM
Last Updated : 16 May 2020 07:13 AM
தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்கு 2.23 லட்சம் பிசிஆர் கிட்கள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரம் பேர்வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 லட்சம்பேருக்கு பரிசோதனை செய்யப்பட் டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பிசிஆர் பரிசோதனை கிட்கள் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், தூத்துக்குடியில் அரசு டாக்டர் ஒருவர், பரிசோதனை கிட்கள் இல்லை, அவருக்கு நோய் பாதிப்பு இல்லை என்று கூறுங்கள் என்ற தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக அரசிடம் தற்போதைய நிலையில் 2.23 லட்சம் பிசிஆர்பரிசோதனை கிட்கள் கையிருப்பில்உள்ளன. மேலும், 11 லட்சம் பிசிஆர்கிட்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு 1 லட்சம் வீதம்கிட்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவை தமிழகம் முழுவதும் உள்ளஆய்வகங்களுக்கு பிரித்து அனுப்பப் படுகின்றன. இதனால் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றனர்.
ரூ.1.50 கோடியை திரும்பப் பெற்றது தமிழகம்
கரோனா வைரஸை விரைவாகக் கண்டறிய முதல்கட்டமாக 24 ஆயிரம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை சீனாவில் இருந்து தமிழக அரசு வாங்கியது. மேலும் மத்திய அரசு கொள்முதல் செய்த 3 லட்சம் கருவிகளில், 12 ஆயிரம் கருவிகள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டன. இந்த கருவிகளில் பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ரேபிட் கருவிகளை திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.5 ஆயிரம் கருவிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள மாநில அரசின் 19 ஆயிரம் கருவிகள் மற்றும் மத்திய அரசின் 12 ஆயிரம் கருவிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலிடம் (ஐசிஎம்ஆர்) தமிழக அரசு வழங்கியது. சீன நிறுவனத்திடம் அக்கருவிகளை ஒப்படைத்த ஐசிஎம்ஆர், அதற்கான பணத்தையும் திரும்ப பெற்றது. தமிழக அரசு வாங்கிய 24 ஆயிரம் கருவிகளுக்கு ரூ.1.50 கோடி செலுத்தப்பட்டது. தற்போது கருவிகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டதால், முழு பணத்தையும் சீன நிறுவனம் கொடுத்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT