தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
2 min read

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் நாளை மாலை புயலாகவும் மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்:

“தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தெற்கு கடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் நாளை மாலை புயலாகவும் மாறும்.

இந்த நிலை 18ம் தேதி காலை வரை வட மேற்கில் நகரும் பின்னர் திசையில் மாற்றம் பெற்று வட கிழக்காக நகரும். இதன் காரணமாக வருகின்ற 18,19 தேதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 கி.மீ முதல் 85 கி.மீ வரை வேகத்தில் வீசும்,அதிகபட்சமாக 95 கி.மீ வேகத்திற்கு சூறாவளி காற்று இருக்கும்.

இதன் காரணமாக தெற்கு வங்க கடல்,மத்திய வங்க கடல், குமரிக்கடல், லட்சத்தீவுகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு செல்ல வேண்டாம்..

மீனவர்களுக்கான எச்சரிக்கை

14 ஆம் தேதி : தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ வரை வீசக்கூடும். 15ஆம் தேதி : தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 - 55 கி.மீ வரையும் அவ்வப்போது 65 கி.மீ வரையும் வீசக்கூடும்.

மத்திய தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 - 65 கி.மீ வரையும் அவ்வப்போது 75 கி.மீ வரையும் வீசக்கூடும். அந்தமான் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ வரை வீசக்கூடும்.

16-ம் தேதி : மத்திய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 55 - 65 கி.மீ வரையும் அவ்வப்போது 75 கி.மீ வரையும் வீசக்கூடும். அந்தமான் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ வரை வீசக்கூடும்.

17-ம் தேதி : மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 - 75 கி.மீ வரையும் அவ்வப்போது 85 கி.மீ வரையும் வீசக்கூடும்.‌ அந்தமான் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ வரை வீசக்கூடும்.

18-ம் தேதி : மத்திய மேற்கு மற்றும் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 - 85 கி.மீ உறையும் அவ்வப்போது 95 கி.மீ வரையும் வீசக்கூடும்.‌ வடக்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ வரையும் வீசக்கூடும்.

கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதன் காரணமாக மீனவர்கள் 14-ம் தேதி முதல் தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்கு இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in