Published : 14 May 2020 12:19 PM
Last Updated : 14 May 2020 12:19 PM

பின்னடைவில் முதலிடம்: தமிழக அரசை மீண்டும் சாடும் கமல்

பின்னடைவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசை கமல் சாடியுள்ளார் .

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. இந்திய அளவில் கரோனா தொற்று எண்ணிக்கையில் தமிழகம் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

அதேவேளையில், மே 7-ம் தேதி டாஸ்மாக் கடைகளைத் திறந்தது தமிழக அரசு. டாஸ்மாக் கடையை மூடுவதற்காகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்து மூட உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று (மே 14) நடைபெறவுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்த தமிழக அரசின் செயல்பாடுகளை மீண்டும் கமல்ஹாசன் சாடியுள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கரோனா பாதிப்பில் 8-ம் இடத்திலிருந்து 2-ம் இடத்தை எட்டிப் பிடித்துவிட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளைத் திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

— Kamal Haasan (@ikamalhaasan) May 14, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x