Last Updated : 13 May, 2020 06:58 PM

 

Published : 13 May 2020 06:58 PM
Last Updated : 13 May 2020 06:58 PM

ராமநாதபுரத்தில் மழையால் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் மரணம்

ராமநாதபுரத்தில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் உயிரிழந்தார். மற்றொரு சிறுவன் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், இவர் தனியார் மருத்துவ ஆய்வக பரிசோதகராக உள்ளார். இவரது மனைவி சரண்யா. இத்தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களது மூத்த மகனான ஜெப்ரிரோஹித்(5) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மணீஷ்குமார்(10) உள்ளிட்ட சிறுவர்கள் சிலர் நேற்று மாலை எம்.எஸ்.கே.நகர் தேவாலயம் அருகேயுள்ள ஒரு வீட்டருகே விளையாடியுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு பூசாமல் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் சிறுவர்கள் ஜெப்ரிரோஹித், மணீஷ்குமார் மற்றும் அப்பகுதியில் இருந்த பிரிசில்லா(31) என்ற பெண் ஆகியோர் சிக்கி பலத்த காயமடைந்தனர். இவர்களை அப்பகுதியினர் மீட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதில் ஜெப்ரிரோஹித்தை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனையடுத்து சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.

விபத்தில் கால், தலையில் பலத்த காயமடைந்த மணீஷ்குமார், பிரிசில்லா ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சுவர் இடிந்து சிறுவன் ந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிறுவன் ஜெப்ரிரோஹித் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x