Published : 12 May 2020 10:09 PM
Last Updated : 12 May 2020 10:09 PM
பிரதமர் மோடியின் உரை குறித்து கமல் தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே அவ்வப்போது மாநில முதல்வர்களுடன் ஆலோசனைகள் நடத்தி கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறார். அதன்படி நேற்று (மே 11) மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு இன்று (மே 12) இரவு 8 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
மே 17-ம் தேதியுடன் 3-வது ஊரடங்கு முடிவுக்கு வருவதால், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என பலரும் ஆவலுடன் எதிர்நோக்கினார். பிரதமர் மோடி தனது பேச்சியில் உலகளவில் கரோனாவின் தாக்கம் குறித்து, இந்தியாவில் கரோனா தாக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
கரோனா பாதி்ப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்புக்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் தனது பேச்சில் குறிப்பிட்டார். பின்பு 4-வது ஊரடங்கு இருக்கும் எனவும், ஆனால் அதில் பெரும் தளர்வுகள் இருக்கும் எனவும் தெரிவித்தார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்து வருகின்றன. தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
"நாங்கள் அனைவரும் நீங்கள் கூறியதில் 2 விஷயங்களை ஏற்றுக் கொள்கிறோம் பிரதமர் மோடி அவர்களே. இந்த கடினமான சூழலில் ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள். எதிர்காலத்தைச் சார்ந்திருக்கிறார்கள். இந்த பொருளாதாரத் திட்டத்தை நாம் வரவேற்கும் வேளையில், அது என்னுடைய நாட்டில் உள்ள ஏழைகளுக்கு எப்படிக் கிடைக்கிறது என்ற தகவல்களை நான் எதிர்பார்ப்பேன்."
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
We all agree on 2 things with you Mr. Prime Minister. @PMOIndia .The poor are suffering the most in this crisis and being self reliant is the future.While we welcome the economic package, I will watch out for the details to see how the poorest of my country get their due atlast.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT