Published : 12 May 2020 06:47 AM
Last Updated : 12 May 2020 06:47 AM
அந்தமான் மற்றும் நிகோபார் பகுதி யில் வரும் 16-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த மான் பகுதியில் நிலவும் வளிமண் டல மேலடுக்கு சுழற்சி நாளை (மே 13) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை, ராமநாதபுரம், சிவ கங்கை, திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசா னது முதல் மிதமான மழை வரை பெய்யும். கன்னியாகுமரி மாவட் டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன்கூடிய கனமழை பெய்யும்.
குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவையொட்டிய பகுதி களில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.
தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் திருத் தணியில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகக்கூடும். அதனால் இன்று விவசாயிகள், பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்.
அந்தமான் மற்றும் நிகோபார் பகுதியில் வரும் 16-ம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்குவதற் கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நாளை (மே 13) உருவாகக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT