Published : 11 May 2020 01:36 PM
Last Updated : 11 May 2020 01:36 PM

ஆன்லைன் மூலமும் மது விற்கத் தடை கோரி வழக்கு: மே 14-க்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைப்பு

ஆன்லைன் மூலமும் மது விற்கத் தடை கோரி மதுரை நுகர்வோர் அமைப்பு தொடர்ந்த வழக்கை மே 14-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனைகளை விதித்து மது விற்க அனுமதித்து அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நிபந்தனைகள் மீறப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், ஆன்லைன் மூலமும் மது விற்கத் தடை விதிக்கக் கோரி, மதுரை நுகர்வோர் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ''டாஸ்மாக் கடைகளை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், அதன் முடிவைப் பொறுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்'' எனக் கூறி, விசாரணையை நீதிபதிகள் 14-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x