வீடுகளுக்கு முதல் 200 யூனிட் மின்சாரத்துக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது; டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளுக்குக் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் முதல் 100 யூனிட் மின்சாரத்தை 200 யூனிட் ஆக மாற்றி அமைக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (மே 4) தன் ட்விட்டர் பக்கத்தில், "3-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதியை இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதுடன், அதில் சலுகைகளையும் அறிவிக்க வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

வீடுகளுக்குக் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் முதல் 100 யூனிட் மின்சாரத்தை 200 யூனிட் ஆக மாற்றி அமைக்க வேண்டும். அதனடிப்படையிலேயே மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு ஓரளவுக்குச் சுமை குறையும். மேலும், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் இதுபோன்றதொரு மின் கட்டணச் சலுகையைத் தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in