Published : 07 Aug 2015 08:43 AM
Last Updated : 07 Aug 2015 08:43 AM

கண்ணாடி உடைந்து விழுந்ததில் 5 பேர் காயம்: விமான நிலையத்தில் 47-வது விபத்து

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர்.

சென்னை விமான நிலைய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையத்தில் மேற்கூரைகள், கிரானைட் கற்கள், கண்ணாடி கதவுகள் உடைந்து விழுவது தொடர் கதையாக உள்ளது. இதுவரை 46 முறை உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 47-வது முறை யாக நேற்று மாலை பன்னாட்டு முனையத்தின் பார்வையாளர்கள் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு இருந்த பெரிய மின் விளக்கை சுற்றி போட்டப்பட்டு இருந்த கண்ணாடி திடீரென உடைந்து கீழே விழுந்தது. கண்ணாடி விழுந்ததில் உறவினர் மற்றும் நண்பர்களை வழியனுப்ப வந்த சுரேத் (28), அருண் (23), முரளி (36), ஜெயச்சந்திரன் (60), குமார் (30) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 5 பேரும் தனியார் மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x