Published : 02 May 2020 07:22 AM
Last Updated : 02 May 2020 07:22 AM

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது- தொழிற்சாலைகளை இயக்குவது குறித்து முடிவு

சென்னை

நாடு முழுவதும் ஊரடங்கை மே 17-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடி வெடுக்க முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது.

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, மே 3-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல் வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது சில மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிப் பதற்கு பரிந்துரைத்தனர்.

தமிழகத்தில் தற்போது 12 மாவட் டங்கள் சிவப்பு மண்டலத்தில் வருகிறது. சென்னையில் வைரஸ் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 203 பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தச் சூழலில் தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு இல்லை என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைந்திருந்தது. எனவே, ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க தமிழக அரசு முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டித்து மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து, தமிழகத் தில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடி வெடுப்பதற்காக முதல்வர் பழனி சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற் கின்றனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் தொழிற்சாலைகள் இயங்க அனு மதிப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தனது பரிந்துரைகளை முதல்வர் பழனி சாமியிடம் நேற்று அளித்துள்ளது.

இந்த பரிந்துரைகளை செயல் படுத்துவது குறித்தும், கட்டுப்பாடு கள் தளர்த்தப்பட்டுள்ள ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மேற் கொள்ள வேண்டிய பணிகள் குறித் தும் அமைச்சரவையில் ஆலோ சித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இதுதவிர, தொழிலதிபர்களுடனும் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். அவர்களது கோரிக்கைகள் குறித் தும் அமைச்சரவையில் விவாதிக் கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ள நிலையில், பொதுமக் களுக்கு கூடுதலாக வழங்க வேண்டிய நிவாரண உதவிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக் கப்படும் என்றும், இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x