Published : 01 May 2020 07:43 AM
Last Updated : 01 May 2020 07:43 AM
கரோனா நோய்த் தொற்றை துரிதமாகவும், துல்லியமாகவும் கண்டறிய சென்னை ஐஐடி உருவாக்கி வரும் புதிய ரேபிட் டெஸ்ட் கருவிவிரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள் ளனர்.
இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றை துல்லியமாக கண்டறிய ‘ஆர்.டி மற்றும் பி.சி.ஆர்’ என்ற கருவி பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இதன்மூலம் தொற்று கண்டறிய காலதாமதமாகிறது.
இதனால், துரிதமாக நோய்த் தொற்றைக் கண்டறிய சீனா உருவாக்கிய ரேபிட் டெஸ்ட் கருவியைமத்திய அரசு இறக்குமதி செய்தது.ஆனால், இந்தக் கருவி, முடிவுகளை துல்லியமாக தெரிவிக்கவில்லை. எனவே இக்கருவியை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியது. இதையடுத்து, ஆர்டி மற்றும் பிசிஆர் கருவி மூலமே கரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், துல்லியமா கவும், துரிதமாகவும் கரோனா தொற்று சோதனை செய்ய புதிய ரேபிட் டெஸ்ட் கருவி தயாரிக்கும் பணியில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
2 கட்ட சோதனைகள் வெற்றி
இதுதொடர்பாக ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறும் போது, “புதிய ரேபிட் டெஸ்ட் கருவியை கண்டுபிடிக்க கேப் ஜெமினி நிறுவனத்துடன் ஐஐடி இணைந்துள்ளது. இந்த ரேபிட் டெஸ்ட் கருவி, சீனா கருவி் போல்இல்லாமல் தரமாக இருப்பதோடு,10 நிமிடத்தில் நோய்த் தொற்று குறித்து துல்லிய முடிவுகளை வெளியிடும். கருவி குறித்து 2 கட்ட சோதனைகள் வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளன.
இதையடுத்து, புதிய கருவியானது ஐசிஎம்ஆர்-ன் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அங்கு நடத்தப்படும் பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகு விரை வில் கருவி தயாரிப்பு பணி தொடங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துவிடும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT