Published : 29 Apr 2020 07:57 AM
Last Updated : 29 Apr 2020 07:57 AM

மத்திய அரசு கூடுதலாக அறிவித்துள்ள 5 கிலோ இலவச அரிசி மே, ஜூனில் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

மத்திய அரசு அறிவித்துள்ள 5 கிலோ இலவச அரிசி, ரேஷன் கடைகளில் மே, ஜூன் மாத பொருட்களுடன் சேர்த்து வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு ்அமலில் உள்ள நிலையில் கடந்தமார்ச் 26-ம் தேதி செய்தியாளர் களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ் ஏப்ரல், மே, ஜூன் மாதங்க ளுக்கு நியாயவிலைக் கடைகளில் வழக்கமாக வழங்கப்படும் பொருட்கள் தவிர கூடுதலாக ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங் கப்படும்’’ என அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பிரதமருடனான காணொலி காட்சி கூட்டத்தின்போதும், பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் தமிழகத்துக்கு கூடுதலாக அரிசி, கோதுமை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கோரியிருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த 5 கிலோ அரிசியை வழங்குவதற்காக கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய ரூ.84 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டமும் தமிழக அரசின் பொதுவிநியோக திட்டமும் இணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஒருவருக்கு 5 கிலோ அரிசி, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே ஏப்ரல்மாதத்துக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள் ளன. எனவே, மத்திய அரசு அறிவித்துள்ள 5 கிலோ அரிசியை ரேஷன் கடைகளில் மே, ஜூன் மாதங்களில் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

தமிழக அரசு ஏற்கெனவே இலவசமாக ஒரு கிலோ பருப்பு வழங்கி வருவதால் அதற்கு மத்திய அரசால் ஒதுக்கப்படும் தொகை, கூடுதலாக வழங்கப்படும் இலவச அரிசிக்கு சரிகட்டப்படும். மேலும், அரிசிக்கு கூடுதலாக செலுத்தப்பட வேண்டிய ரூ.84 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x