Published : 16 Aug 2015 10:03 AM
Last Updated : 16 Aug 2015 10:03 AM
புதுக்கோட்டையில் அனைத்து கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங் களின் சார்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கூட்டுறவு வங்கியில் இருந்து ஓய்வுபெறுவோருக்கு கருணை ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.5000 வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் உருவாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 28-ம் தேதி மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
கோரிக்கை நிறைவேற்றப் படாவிட்டால், செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். அதிலும் தீர்வு காணப்படாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT