

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தமிழக வட்ட தலைமை பொது மேலாளராக என்.பூங்குழலி பொறுப்பேற்றார்.
இதுதொடர்பாக மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பிஎஸ்என்எல் தமிழக வட்டத்தின் முதல் பெண் தலைமை பொது மேலாளராக என்.பூங்குழலி பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய தொலைத்தொடர்பு அதிகாரியாக 1979-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். சென்னை ஐஐடி-யில் மின்னணுவியல் பட்டப் படிப்பை நிறைவு செய்த அவர், எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். கொரியா, மலேசியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்றுள்ளார். தொலைத்தொடர்பு துறையிலும், பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பல்வேறு பொறுப்புகளில் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.