Published : 18 Apr 2020 06:59 AM
Last Updated : 18 Apr 2020 06:59 AM

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி எண் அறிவிப்பு

குடும்ப வன்முறையால் பாதிக் கப்படும் பெண்களுக்கான உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டிலேயே உள்ளனர். இவ் வாறு, வீட்டிலிருக்கும் பெண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

எனவே, பெண்களின் பாது காப்பை கருத்தில் கொண்டு தேசிய பெண்கள் ஆணையம் 0721-7735372 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது. இந்த உதவி எண்ணை சமூக நலத் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

தேவைக்கு ஏற்ப உதவி

இதுதொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரி கூறியதாவது:

ஊரடங்கு உத்தரவு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்முறைகள் மற்றும் பாலியல் கொடுமைகளுக்கு 0721-7735372 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். அவர்களுடைய தேவைக்கு ஏற்ப காவல் துறை, சட்டம், மருத்துவம் உள்ளிட்ட உதவிகள் உடனடியாக வழங் கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x