Published : 17 Apr 2020 07:53 AM
Last Updated : 17 Apr 2020 07:53 AM

20-ம் தேதிக்கு பிறகு இயங்குவதற்கு ஸ்டுடியோக்களுக்கு அனுமதி தர புகைப்பட கலைஞா்கள் கோாிக்கை

மதுரை மாவட்டத்தில் சிறிய அச்சகங்கள், ஸ்டுடியோக்கள் ஏராளமாக உள்ளன. அதனை நம்பி வாழும் தொழிலாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் உள்ளனர்.

கரோனா ஊரடங்கால் கடந்த25 நாட்களாக இவர்கள் அச்சகங்களையும், ஸ்டூடியோக் களையும் மூடிவிட்டனர். அதனால், வாழ்வாதாரம் இன்றி திண்டாடுகின்றனர். எனவே, தமிழக அரசு ஊரடங்கு காலத்துக்கான நிவாரணத்தை மற்ற துறை தொழிலாளர்களை போல் எங்களுக்கும் வழங்க வேண்டும், 20-ம் தேதி முதல் எங்கள் தொழிலையும் செயல்பட அனும திக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை ஒய்.ஒத்தக்கடை ஸ்டூடியோ உரிமையாளர் பி.சுரேஷ் கூறுகையில், ‘‘கரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு எடுக்கும் அசாதாரணநிலையில் பாதிக்கப்படுவோரில் நாங்களும் ஓர் அங்கம். இந்தக் காலத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் நடப்பதில்லை. அதனால், புகைப்பட கலைஞர்கள் வாழ்வாதாரம் முற் றிலும் ஸ்தம்பித்துள்ளது.

ஏப்.20 முதல் சிறு தொழில்கள் செயல்பட பிரதமர் அனுமதி வழங்கியுள்ளார். எங்கள் தொழிலையும் செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். அரசு அறிவுறுத்தும் சமூக இடைவெளி யுடன் முகக்கவசம் அணிந்து மக்கள் கூடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x