Published : 17 Apr 2020 07:00 AM
Last Updated : 17 Apr 2020 07:00 AM

திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டத்தில் 104 டிகிரி வெயில் பதிவாகும்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியசரன் கூறியதாவது:

அடுத்த சில தினங்களுக்கு திருச்சி, மதுரை, விருதுநகர், சேலம், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பச் சலனம் காரணமாகதென் தமிழகக் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வியாழன் காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தென்காசியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x