Published : 03 Aug 2015 10:14 AM
Last Updated : 03 Aug 2015 10:14 AM

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு: கருணாநிதியுடன் 9 பேர் குழு ஆலோசனை

திமுக தலைவர் கருணாநிதியுடன் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க டி.ஆர்.பாலு, கனிமொழி, பேராசிரியர் அ.ராமசாமி, ஆர்.சண்முகசுந்தரம், சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, என்.ஆர்.இளங்கோ, டி.கே.எஸ்.இளங்கோவன், தங்கம் தென்னரசு ஆகிய 9 பேர் கொண்ட குழுவை கடந்த 27-ம் தேதி கருணாநிதி அறிவித்தார்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம், அதன் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

முன்னதாக இக்குழுவினர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் மக்களைக் கவரும் வகையில் முக்கிய அம்சங்கள் இடம்பெற வேண்டும் என கருணாநிதி ஆலோசனை வழங்கியுள்ளார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக தொழிலதிபர் கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விவசாயிகள், தொழிற்சங்கத்தினர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினருடனும் இக்குழுவினர் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x