விருதுநகரில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மருத்துவப் பரிசோதனை தொடக்கம்

விருதுநகரில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மருத்துவப் பரிசோதனை தொடக்கம்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 11 பேரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

அவர்களில் 54 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு தொண்டையில் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, தற்போது மேலும் 36 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு தொண்டையில் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், "பரிசோதனை முடிவுகள் தெரிந்த பின்னர் அடுத்த கட்ட சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தற்பொழுது கரோனா வைரஸ் தொற்று கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர் கருவி ஒன்று விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் முழுமையாக பொருத்தப்பட்டு 3 நாட்களில் மதுரை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையைப் போன்று விருதுநகரில் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது" எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in