Published : 10 Apr 2020 08:36 AM
Last Updated : 10 Apr 2020 08:36 AM

மதுரையில் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பிய தாய், 2 மகன்கள்

மதுரை:

மதுரையில் கரோனாவுக்கு உயிரிழந்தவரின் மனைவி, 2 மகன்கள் இந்த நோயில் இருந்து குணமடைந்து வீட்டுக்குச் சென்றனர்.

தமிழகத்தில் கரோனாவுக்கு முதலில் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரைப் பரிசோதனை செய்தபோது அவரது மனைவி, 2 மகன்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மூன்று பேரும் குணமடைந்து நேற்று முன்தினம் வீட்டுக்குத் திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x