Last Updated : 09 Apr, 2020 08:40 AM

 

Published : 09 Apr 2020 08:40 AM
Last Updated : 09 Apr 2020 08:40 AM

வருசநாடு பளியர்களுக்கு நிவாரணம்

மதுரை

தேனி மாவட்டம், வருசநாடு மலையில் கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டியில் 24 பளியர் குடும்பத்தினர் வசிக் கின்றனர். இவர்களுக்கு அரசின் கரோனா நிவாரணம் வழங்கப் படவில்லை எனத் தகவல் வெளி யானது.

இதுகுறித்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் கா.சந்திரசேகரன் கவனத்துக்குக் கொண்டு சென்ற போது, நிவாரணத் தொகை ரூ.1,000-ம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இதுபற்றி பளியர் குடும்பத்தினர் சிலரிடம் கேட்டபோது, ரேஷன் கார்டு வைத்துள்ள 14 குடும்பங் களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைததுள்ளது என்றனர்.

இதுகுறித்து துணை முதல்வர் அலுவலக கவனத்துக்கு ‘இந்து தமிழ்' நாளிதழ் கொண்டு சென்றது. அதன்படி, ரேஷன் கார்டு இல்லாத குடும்பத்தினருக்கும் நிவாரணத் தொகை, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா தெரிவித் தார்.

இதேபோல ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜனும் பளியர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x