Last Updated : 08 Apr, 2020 09:38 PM

 

Published : 08 Apr 2020 09:38 PM
Last Updated : 08 Apr 2020 09:38 PM

கரோனா பாதித்து தப்பிச் சென்ற டெல்லி நபர்: தேடி வரும் காவல்துறை

டெல்லி பட்டேல் நகரைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் கடந்த டிசம்பர் 10ம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற நேர்முக தேர்வுக்கு வந்துள்ளார்.

பின்னர் சாலை விபத்தை ஏற்படுத்தியதாக புதுச்சேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த 16ம் தேதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

4 நாட்கள் புதுச்சேரியில் சுற்றித்திரிந்த அவர் 21ம் தேதி விழுப்புரம் வந்து டெல்லி செல்லும் லாரி டிரைவர்கள் இருவருடன் தங்கிருந்துள்ளார்.

புகாரின் பேரில் அவரை கடந்த 6ம் தேதி விழுப்புரம் கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே கரோனா பரிசோதனை முடிந்து கரோனா தொற்று இல்லை என நேற்று முன் தினம் இரவு 26 பேரை சுகாதாரத்துறை அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்தது.

நள்ளிரவில் அந்த 26 பேரில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை பிடித்து வரும்படியும் போலீஸாரை சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது.

அதன்படி விழுப்புரம் போலீ்ஸார் விடுவிக்கப்பட்ட 4 பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் மீண்டும் சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனர். ஆனால் டெல்லியில் இருந்து வந்த புதுச்சேரி நபரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x