108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் அளித்திடுக; தினகரன்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் அளித்திட வேண்டும் என, தமிழக அரசை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஏப்.8) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவத் துறை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று , 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத சிறப்பு ஊதியம் அளித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம் முழுவதிலும் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட இந்த அவசர ஊர்தி பணியாளர்களும் மக்களின் உயிரைக் காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது.

தற்போதைய நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்" என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in