Last Updated : 07 Apr, 2020 01:36 PM

 

Published : 07 Apr 2020 01:36 PM
Last Updated : 07 Apr 2020 01:36 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண நிகழ்ச்சி ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்- ஆறுகால பூஜை மட்டும் நடைபெற்றது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்காததால் பக்தர்கள் ஏமாற்றம்.கோயிலுக்குள் 4 பட்டர்கள் கலந்து கொண்ட 6 கால பூஜை மட்டுமே நடைபெற்றது.

வருடம் தோறும் பங்குனி மாதம் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெறும்.அதற்கான கொடியேற்றம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற இருந்த ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண கொடியேற்றம் நிகழ்ச்சி வைபவம் கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆண்டாள் கோயிலில் நடைபெற இருந்த திருக்கல்யாண நிகழ்ச்சி கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கோயில் வளாகமே வெறிச்சோடி காணப்படுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு 6 கால சிறப்பு பூஜைகள் மட்டுமே நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x