Published : 04 Apr 2020 07:37 PM
Last Updated : 04 Apr 2020 07:37 PM

ஏப்ரல் 4-ம் தேதி நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏப்ரல் 4-ம் தேதியன்று கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கின்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 485 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று இருக்கிறது என்ற பட்டியல் இதோ:

மாவட்டம் ஏப்ரல் 2 வரை ஏப்ரல் 3 ஏப்ரல் 4 மொத்தம்
1 சென்னை 46 35 7 88
2 திண்டுக்கல் 17 26 43
3 திருநெல்வேலி 30 6 1 37
4 ஈரோடு 32 32
5 கோயம்புத்தூர் 29 29
6 நாமக்கல் 18 3 3 24
7 தேனி 20 1 2 23
8 ராணிப்பேட்டை 5 18 23
9 கரூர் 17 3 2 22
10 செங்கல்பட்டு 18 1 19
11 மதுரை 15 2 17
12 திருச்சி 17 17
13 திருவாரூர் 7 5 12
14 திருவள்ளூர் 1 10 11
15 விருதுநகர் 10 1 11
16 திருப்பத்தூர் 10 10
17 விழுப்புரம் 3 6 1 10
18 சேலம் 6 2 1 9
19 தூத்துக்குடி 5 4 9
20 திருவண்ணாமலை 2 4 6
21 நாகப்பட்டினம் 5 5
22 சிவகங்கை 5 5
23 கன்னியாகுமரி 5 5
24 வேலூர் 1 2 3
25 காஞ்சிபுரம் 3 3
26 கடலூர் 0 3 3
27 திருப்பூர் 1 2 3
28 ராமநாதபுரம் 2 2
29 கள்ளக்குறிச்சி 0 2 2
30 தஞ்சாவூர் 1 1
31 பெரம்பலூர் 0 1 1
மொத்தம் 309 102 74 485

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x