Last Updated : 04 Apr, 2020 02:44 PM

 

Published : 04 Apr 2020 02:44 PM
Last Updated : 04 Apr 2020 02:44 PM

கரோனா தொற்றிலிருந்து காக்க விருதுநகர் ஸ்ரீ மகா அமிர்த பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தன்வந்திரி ஹோமம்

உலக மக்களை கரோனா கொடிய நோயிலிருந்து காப்பாற்றும் வகையில் விருதுநகரில் உள்ள ஓம் ஸ்ரீ சிவகுரு மடம் ஸ்ரீ மகா அமிர்த பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து உலக மக்களை காக்க வேண்டி ஸ்ரீ மகா அமிர்த பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தன்வந்திரி ஹோமம், சத்ரு சம்ஹார சுப்பிரமணிய ஹோமம் மற்றும் அஸ்திர வேள்வி உலக நன்மைக்காக நடத்தப்பட்டது.

அதையடுத்து ஆலயத்தில் ஸ்ரீ மகா அமிர்தா பஞ்சலிங்கேஸ்வரர் சுவாமிக்கு கபசுர குடிநீர் அபிஷேகம் செய்யப்பட்டு மூலிகை மந்திரங்களால் சுவாமிக்கு ஆராதனையும் அதைத்தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்களும் நடைபெற்றன.

தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு ஐயப்ப பக்தர்களால் கபசுர குடிநீர் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x