ஊரடங்கால் வேலையிழந்த தினக்கூலி தொழிலாளர்கள்: உதவிக்கரம் நீட்டிய வழக்கறிஞர்கள் குழு

ஒத்தக்கடையில் கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் வழக்கறிஞர்கள் குழு
ஒத்தக்கடையில் கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் வழக்கறிஞர்கள் குழு
Updated on
1 min read

ஊரடங்கால் வேலையிழந்த தினக்கூலி தொழிலாளர்களுக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு உணவுப்பொருட்கள் வழங்கியது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கால் தினக்கூலி தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவி செய்வதற்காக வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய மதுரை மாவட்ட கரோனோ உதவிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழு சார்பில் மதுரை ஒத்தக்கடை, நெல்பேட்டை, ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன.

இவற்றை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையிலான குழுவினர் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in