Published : 03 Apr 2020 08:09 AM
Last Updated : 03 Apr 2020 08:09 AM

இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் கப்பலில் கடத்திய ரூ.605 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்- பாகிஸ்தானை சேர்ந்த 9 பேர் கைது

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் கப்பல்.

ராமேசுவரம்

எஸ். முஹம்மது ராஃபி

கொழும்பிலிருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் இந்தியப் பெருங்கடலில் கொடி இல்லாமல் பயணித்த வெளிநாட்டுக் கப்பலை இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பலான `சயுர' கண்டறிந்து அந்தக் கப்பலைச் சோதனையிட்டது.

அதில் `மெத்தம்பெட்டமைன்' என்ற போதைப்பொருள் 605கிலோ, `கெடமைன்' போதைப்பொருள் 579 கிலோ, 200 பாக்கெட் `பாபுல்' போதைமருந்து மற்றும் அடையாளம் காணப்படாத 100 கிராம் போதை மாத்திரைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.605 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் பறிமுதலான போதைப் பொருட்களில் மிகப் பெரிய எண்ணிக்கை இதுவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x