Last Updated : 02 Apr, 2020 08:06 PM

 

Published : 02 Apr 2020 08:06 PM
Last Updated : 02 Apr 2020 08:06 PM

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அரியாங்குப்பத்தில் ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது.

புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றால் முதலில் மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்த வெளிநாடு சென்று வந்த மூதாட்டி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பிறகு அவர் குணமடைந்தார். அவர் மருமகள் உட்பட அவர் வீட்டருகே யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியானது. புதுச்சேரியில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.

இச்சூழலில் மத வழிபாடு மாநாட்டுக்காக டெல்லி சென்று வந்தோரில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இருவருக்கும், திருவாண்டார் கோயிலில் ஒருவருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதியானது.

இச்சூழலில் அரியாங்குப்பத்தில் கரோனா தொற்றுடைய ஒருவரின் 39 வயது மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது இன்று (ஏப்.2) மாலை உறுதியானது. இதையடுத்து அவருக்கு இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமாரிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் தற்போது 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவரின் பரிசோதனை முடிவு வர வேண்டியுள்ளது. காரைக்காலில் பரிசோதித்த ஏழு பேரில் 6 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன. ஒருவருக்கு முடிவு வர வேண்டியுள்ளது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x