கரோனா கால கருணை: காரைக்குடியில் உணவின்றி தவித்த மணிப்பூர், அருணாச்சலபிரதேச மாணவர்களுக்கு உதவிய அதிகாரிகள்

காரைக்குடியில் சிக்கி தவித்த வெளிமாநில மாணவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை டிஎஸ்பி அருண், வட்டாட்சியர் பாலாஜி வழங்கினர்.
காரைக்குடியில் சிக்கி தவித்த வெளிமாநில மாணவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை டிஎஸ்பி அருண், வட்டாட்சியர் பாலாஜி வழங்கினர்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உணவின்றி தவித்த மணிப்பூர், அருணாச்சலபிரதேசம் மாணவர்களுக்கு போலீஸ் டிஎஸ்பி அருண், வட்டாட்சியர் பாலாஜி உதவினர்.

அருணாச்சலபிரதேசம், மணிப்பூர் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கல்வி நிலையங்களுக்கு திடீரென விடுமுறை விடப்பட்டதால், அவர்களால் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

மேலும் அவர்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என உதவி மையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று டிஎஸ்பி அருண், வட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் அம்மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in