Published : 31 Mar 2020 07:50 AM
Last Updated : 31 Mar 2020 07:50 AM

முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி.சிட்டிபாபு காலமானார்

தமிழகத்தின் மூத்த கல்வி யாளர்களில் ஒருவரும், முன்னாள் துணைவேந்தருமான எஸ்.வி.சிட்டிபாபு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 100.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளிக் கல்வி இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர், தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் துணை தலைவர் என தமிழக கல்வித் துறையில் உயர் பதவிகளை வகித்தவர் பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு. அவர் துணைவேந்தராக பணியாற்றிய காலத்தில் உயர் கல்வியிலும் பல்கலைக்கழக நிர்வாகத்திலும் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

உடல்நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக சென்னை மேத்தா நகரில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வந்த சிட்டிபாபு, ஞாயிற்றுக்கிழமை மாலைகாலமானார். அவரது இறுதிச் சடங்கு நேற்று மாலை நுங்கம்பாக்கம் மயானத்தில் நடந்தது.

மறைந்த சிட்டிபாபுவுக்கு சி.மோகன்குமார், சி.சுகுமார் என்ற இரு மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் மருத்துவர்கள். சிட்டிபாபுவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x