

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் கரோனா காய்ச்சலால் உயிரிழந்தார்.
அவர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகு தியில் உள்ள உழவர் சந்தை மூடப்பட்டது. அதனால் பீபீகுளம் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்காகப் பொதுமக்கள் 2 கி.மீ. தூரம் நின்றிருந்தனர்.
இக்கூட்டத்தைக் கட்டு ப்படுத்தவும், சமூக இடைவெளி விட்டுக் காய்கறிகள் வாங்கவும் பீபீகுளம் உழவர் சந்தையில் மாநகர காவல் துறையினர் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடு பட்டனர்.
உழவர் சந்தை அலுவலர் ஸ்ரீதர் கூறியதாவது:
உழவர் சந்தையில் மொத்தம் 100 கடைகள் உள்ளன. தினமும் வரும் ஆயிரக்கணக்கான மக்க ளை உழவர் சந்தை முன் வரிசையில் நிற்க வைத்து ஒரு கடைக்கு ஒருவர் என்ற விகிதத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் காய்கறிகள் வாங்கு வதற்கு 15 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்றார்.