

மதுரையில் ‘கரோனா’ வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தவர் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 2 பேருக்கு, இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை அண்ணா நகரை சேர்ந்த 54 வயது கட்டுமான ஒப்பந்ததாரர் ‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். அவர் தாய்லாந்தில் இருந்து வந்த சிலரை சந்தித்ததாக அவரது உறவினர்கள் கூறினர். அவர்களைப் பரிசோதனை செய் ததில் அவர்களுக்கு ‘கரோனா’ வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அதனால், சமூகப் பரவலாக இந்த நோய் மதுரையில் பரவிவிட்டதா? என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா பரிசோதனை மையத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பார்வையிட்டார்.