Published : 25 Mar 2020 07:46 AM
Last Updated : 25 Mar 2020 07:46 AM

போடி அருகே காட்டுத் தீயில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு: கேரளாவில் இருந்து தப்பி வந்தவர்கள்

போடி மேற்கு தொடர்ச்சி மலை காட்டுத்தீயில் சிக்கியோரை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக காத்திருக்கும் மருத்துவக் குழுவினர்.

போடி

போடி மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி2 பேர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கூடலூர், போடி உள்ளிட்ட பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் கேரளாவுக்கு ஏலக்காய், தேயிலைத் தோட்ட வேலைகளுக்குச் செல்வது வழக்கம்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்தசில நாட்களுக்கு முன்பு தமிழக எல்லை மூடப்பட்டது. இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. தமிழக தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், போடிராசிங்காபுரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் கேரளாவில் தங்கிவேலை பார்த்து வந்தனர். தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் குடும்பத்தினருடன் சொந்த ஊர் செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக ஜெயமணி, மகேஷ்,வஞ்சரமணி, லோகேஷ், ஒண்டிவீரன், மஞ்சு, ஆனந்த், ஜெய, கீர்த்திகா ஆகிய 9 பேர் கேரள மாநிலம் பூப்பாறை பேதொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வனப்பகுதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.

நண்டாறு, உச்சலூத்து வழியே வந்தபோது கன்னிமார் ஊற்று என்ற இடத்தில் காட்டுத் தீ பற்றியது. காய்ந்த புல் அதிகம் இருந்ததால் தீ வேகமாக பரவியது. இதில்தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சிலர் ஓடி தப்ப முயன்றனர்.

இதையறிந்த சிலர் கிராம மக்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் தீயணைப்பு,வனம், 108 மருத்துவத் துறையினர் மலையடிவாரத்துக்கு விரைந்தனர்.

மீட்புக்குழுவினர் வனத்துக்குள் சென்றபோது இருள் சூழ்ந்ததால் காட்டுத்தீயில் சிக்கியோரைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது.

இதற்கிடையே, காட்டுத்தீயில் சிக்கி 2 பேர் இறந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், தீ மற்றும் புகையால் மூச்சுத் திணறி ஜெய (23), அவரது மகள் கீர்த்திகா (5) இறந்ததாகத் தெரிகிறது. 5 பேர் குகை போன்றபாதுகாப்பான பகுதியில் உள்ளனர். 2 பேர் வனப்பகுதியில் வழிதவறியதாக தெரிகிறது. இரவுநேரம் என்பதால் மீட்பு பணியில்சிரமம் நிலவுகிறது என்றனர்.

2018-ம் ஆண்டு மார்ச் 11-ம்தேதி குரங்கணி மலையில் ஏற்பட்டகாட்டுத்தீயில் சிக்கி மலையேற்றுப் பயிற்சியில் ஈடுபட்ட 23 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x