Published : 24 Mar 2020 09:30 AM
Last Updated : 24 Mar 2020 09:30 AM

புதுச்சேரியில் எல்லைகள் சீல்- வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன 

தமிழகப் பகுதியான விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த வெளி மாநில வாகனங்கள் மதகடிப்பட்டு எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

கரோனா வைரஸ் பரவல் முன்தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நேற்று முதல் வருகிற 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், புதுச்சேரி மாநில எல்லைகளான, கிழக்கு கடற்கரைச் சாலை, கன்னியகோவில், மதகடிப்பட்டு, கோரிமேடு ஆகிய எல்லைகள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் எல்லையில் நிறுத்தப்படுகின்றன. இவை அனைத்துக்கும் புதுச்சேரிக்கு வர அனுமதிஇல்லை.

உள்ளூர் வாகனங்கள் மட்டும் உரிய சோதனைக்கு பின்பு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றன. எல்லைகளில் ஏராளமான போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள 4 பிராந்தியங்களிலும் மக்கள் வெளியே வர தடை விதித்து, வரும் 31-ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவை முதல்வர் நாராயணசாமி பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x