Published : 24 Mar 2020 08:56 AM
Last Updated : 24 Mar 2020 08:56 AM

சென்னையில் குறைந்த அளவில் மாநகர பேருந்துகள் இயக்கம்: கூட்ட நெரிசலால் மக்கள் பாதிப்பு

தமிழகம் முழுவதும் இன்றுமுதல் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும், வணிக நிறுவனங்கள் மூடப்படும், பேருந்துகள் ஓடாது என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து வணிக நிறுவனங்களின் பணியாளர்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பெருங்களத்தூரில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சென்னையில் நேற்று குறைந்த அளவில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் கூட்டமாகச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, மாநகரப் பேருந்துகளின் சேவை நேற்று குறைக்கப்பட்டது.

சென்னையில் மத்திய பணிமனை, வடபழனி, தியாகராயநகர், அண்ணாநகர், அடையாறு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், திருவான்மியூர், அயனாவரம், வியாசர்பாடி, திருவொற்றியூர், எண்ணூர் உட்பட 30-க்கும் மேற்பட்ட பணிமனைகள் உள்ளன.

ஒவ்வொரு பணிமனையில் இருந்தும் வழக்கமாக 150 முதல்300 பேருந்துகள் இயக்கப்படும்.ஆனால், நேற்று பெரும்பாலானபணிமனைகளில் இருந்து 40சதவீத பேருந்துகளே இயக்கப்பட்டன. சில பணிமனைகளில் அதற்கும்குறைவாக இயக்கப்பட்டன. இதனால் பேருந்துக்காக மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.

கூட்ட நெரிசல்

கிண்டியில் பேருந்துக்காக காத்திருந்த சிலரிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் ஏற்கெனவே மின்சார ரயில்களின் சேவை முடங்கியுள்ளது. இருப்பினும், மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல ஓடும் என எதிர்பார்த்தோம். ஆனால், மிகவும் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டதால், பேருந்துகளில் நெரிசல் அதிகமாக இருந்தது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். இருப்பினும், எங்களைப் போன்ற தினசரி ஊழியர்கள் வேலைக்கு சென்றால்தான் வாழ்க்கை நடத்த முடியும். எனவே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்’’ என்றனர்.

பயணிகள் குறைந்ததால்...

மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘கரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் வெளியே செல்வதுகுறைந்துள்ளது.

இதனால், மாநகரப் பேருந்துகளின் இயக்கத்தை குறைத்துள்ளோம். இருப்பினும், தேவையானஅளவுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறோம்’’ என்றனர். பெரும்பாலான பணிமனை
களில் இருந்து 40 சதவீத பேருந்துகளே இயக்கப்பட்டன. சில பணி
மனைகளில் அதற்கும் குறைவாக இயக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x