Published : 23 Mar 2020 06:48 AM
Last Updated : 23 Mar 2020 06:48 AM

தமிழகம் முழுவதும் 9,424 பேர் கண்காணிப்பு

சென்னை

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 9,424 பேர் கண்காணிக் கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள் ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறிகள் இல்லை என்றாலும், அவர்களை சிறப்பு முகாம், வீடு மற்றும் மருத்துவமனைகளில் வைத்து கண்காணிக்கின்றனர்.

இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுவரை 2,05,396 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில், 9,424 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 54 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். 443 பேரின் ரத்த மாதிரிகளை பறிசோதனை செய்ததில், 352 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. 7 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 84 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x