Published : 22 Mar 2020 09:23 AM
Last Updated : 22 Mar 2020 09:23 AM

கரோனா பாதிப்பு முடியும் வரை தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

கரோனா பாதிப்பு முடியும் வரை தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள உமையாள் பரஞ்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள தனது வீட்டை ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘கரோனா பாதிப்பு முடியும் வரை இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டாம்.

தமிழகத்திலும் கரோனா வைரஸ் தாக்கம் உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலமும் கூட கரோனா நோய் பாதிப்பு ஏற்படலாம். எனவே மனுதாரரின் வீட்டை இடிக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் தலைமைச் செயலரை பிரதிவாதியாக சேர்க்கிறோம். அவர் இதுதொடர்பாக உரிய உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.6-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x