Published : 22 Mar 2020 09:21 AM
Last Updated : 22 Mar 2020 09:21 AM

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

சென்னை

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளுடன் இணைந்து பார்கள் செயல்பட்டு வந்தன. இக்கடைகளில் வார நாட்களில் ரூ.90 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை பார்கள் மூடப்படும் என்று கடந்த 16-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, பார்கள் அனைத்தும் மூடப்பட்டது. டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். விற்பனையும் வார நாட்களை விட இரு மடங்கு அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று இயங்காது.

தங்களது மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பதை அனைத்து மாவட்ட மேலாளர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x