

கட்சிக்கும், ஆட்சிக்கும் வெவ்வெறு தலைமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. அவ்வாறு இருந்தால் கட்சி ஒரு நிலைப்பாட்டுக்கே வராது என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், ஆண்டி பட்டி அருகே உள்ள மயிலாடும் பாறைக்கு வந்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
வருமான வரித்துறை சோதனைக்கு பயந்தே, குடியு ரிமைச் சட்டத்துக்கு எதிரான செயல்பாடுகளில் அதிமுக ஈடுபடவில்லை. நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது மத்திய அரசின் அதிகாரத்தின் வெளிப்பாடாக உள்ளது. மத்திய பாஜக அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழகத்தில் திமுகவுக்கு மட்டுமே உள்ளது.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் கட்சிக்கும் ஆட்சிக்கும் வெவ்வெறு தலைமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. அவ்வாறு இருந்தால் கட்சியே ஒரு நிலைப்பாட்டுக்கு வராது
இவ்வாறு அவர் கூறினார்.