Published : 12 Mar 2020 09:09 AM
Last Updated : 12 Mar 2020 09:09 AM
கொடைக்கானல் அருகே உள்ள கோவில்பட்டி பகுதியில் நேற்று காலை முதல் தனியார் பட்டா நிலம் மற்றும் தரிசு நிலங்களில் திடீரென தீ பரவத் தொடங்கியது. அந்த நிலத்தில் இருந்த காய்ந்த புற்கள், செடிகொடிகள், மரங்கள் சாம்பலாயின. பற்றி எரியும் தீ அருகிலுள்ள வனப்பகுதிக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்தும் பணி, நேற்று மாலை வரை தொடங்கப்படவில்லை. வருவாய் நிலங்கள் என்பதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. கோவில்பட்டி மலைப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்து உள்ள நிலையில் வனப்பகுதிக்கு தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT