Published : 12 Mar 2020 09:03 AM
Last Updated : 12 Mar 2020 09:03 AM
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் கடந்த நவம்பரில் சனாதன எதிர்ப்பு மாநாடு' என்ற பெயரில்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் மாநாடுநடைபெற்றது. இதில், தெய்வங்களை அவமதிக்கும் வகையில் திருமாவளவன் பேசியதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து, பெரம்பலூரைச் சேர்ந்த இந்து முன்னணி நகரச் செயலாளர் கண்ணன் அளித்த புகாரின் மீது தமிழக காவல்துறை திருமாவளவன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. சம்பவம் நடந்த பகுதி புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் சரகத்துக்கு உட்பட்டது என்பதால், இவ்வழக்கு புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு புதுச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT