Published : 12 Mar 2020 08:05 AM
Last Updated : 12 Mar 2020 08:05 AM
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பு சார்பில் வரும் ஞாயிறன்று (மார்ச் 15) சென்னை டிஜி வைணவக் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவித்திருந்த மகளிர் திருவிழா நிகழ்வு தள்ளிவைக்கப்படுகிறது.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கோவிட்-19 வைரஸ் வேகமாகப் பரவிவிடும். எனவே இதைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகமாக ஒரே இடத்தில் கூடுவதையும் கூட்டங்கள் நடத்துவதையும் தவிர்க்கும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதையேற்று, ஞாயிறன்று (மார்ச்-15) சென்னை டிஜி வைணவக் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவித்திருந்த மகளிர் திருவிழா நிகழ்வு மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகிறது. நிகழ்வு நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT