விமான நிலையத்தில் கோவிட்-19 சோதனை: கண்காணிப்பில் 25 வெளிநாட்டு பயணிகள்- மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் தகவல் 

விமான நிலையத்தில் கோவிட்-19 சோதனை: கண்காணிப்பில் 25 வெளிநாட்டு பயணிகள்- மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் தகவல் 
Updated on
1 min read

மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளிடம் நடத்திய கோவிட்-19 ஆய்வுக்குப் பின் 25 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கோவிட்-19 விழிப்புணர்வு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசி யதாவது:

கோவிட்-19 குறித்து முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை தீவி ரப்படுத்த மாவட்ட அளவில் ஒருங் கிணைப்புக் குழு கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2 மருத்துவக் குழுக்கள் மூலம் மதுரை விமான நிலையத்தில் கடந்த ஜன.28 முதல் மார்ச் 4-ம் தேதி வரை 15,432 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

சீனாவிலிருந்து 69 பயணிகள், இத்தாலியிலிருந்து வந்த 2 பேர் பரிசோதிக்கப்பட்டதில் கோவிட்-19 தாக்குதல் அறிகுறி ஏதும் இல்லை. சிங்கப்பூர், இலங்கை, துபாயிலிருந்து வந்த 109 பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 25 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சை வார்டில் 8 படுக்கைகள், 4 வெண்டிலேட்டர் வசதியுடன் தயாராக உள்ளது. சுகாதாரமான உணவை சாப்பிட வேண்டும், கொதிக்க வைத்த தண்ணீர் பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த உணவுகள், ஐஸ்கிரீம்களை தவிர்ப்பது நல்லது என்று கூறினார்.

மருத்துவ இணை இயக்குநர் சிவக்குமார், துணை இயக்குநர் ப்ரியா மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in