Published : 05 Mar 2020 04:14 PM
Last Updated : 05 Mar 2020 04:14 PM

கரோனா அச்சுறுத்தல்: மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. 15 இத்தாலியப் பயணிகள் 8 இந்தியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் சோதிக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், விமானநிலைய இயக்குனர் செந்தில் வளவன் சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரியா ராஜ் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பிரபாகரன், தீயணைப்பு , சுங்கத் துறை அதிகாரிகள் மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகள் விக்டர்,, பல்வேறு விமான நிறுவன அதிகாரிகள்,மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கரோனா வைரஸினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் , தற்காப்பு நடவடிக்கையாக ஊழியர்களின் பாதுகாப்பிற்காக முகக்கவசம், கையுறை அணிந்து பணிகளில் ஈடுபட வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x