Published : 05 Mar 2020 08:06 AM
Last Updated : 05 Mar 2020 08:06 AM
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் சென்னையில் இன்று நடக்கிறது.
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் அறிவித்தார். இதைத்தொடர்ந்து ‘ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’, ‘ரஜினி மக்கள் மன்றம்’என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
அண்மையில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ரஜினிகாந்த்தை சந்தித்து தேசியமக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் என்னால் ஆன அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்வேன்” என்று ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார். அதேநேரத்தில் அடுத்த மாதம் 14-ம் தேதிரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளன.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று காலை10.30 மணியளவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழகம்முழுவதும் உள்ள 37 மாவட்டசெயலாளர்கள் கலந்துகொள்கின்றனர். கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் ஆகியவை குறித்துமுக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என்றும் அதன்பிறகு கட்சிதொடங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT