Published : 29 Aug 2015 02:52 PM
Last Updated : 29 Aug 2015 02:52 PM

செப்.9-ல் பாமக மகளிர் அணி சார்பில் மது ஒழிப்புப் போராட்டம்: ஜி.கே.மணி

வரும் செப்.9-ல் பாமக மகளிர் அணி சார்பில் மது ஒழிப்புப் போராட்டம் நடைபெற உள்ளது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

காஞ்சி வடக்கு மாவட்ட செயற்குழுவில் கலந்துகொண்ட ஜி.கே மணி செய்தியாளர்களிடம் பேசினார்.

''வரும் செப்.9-ல் பாமக மகளிர் அணி சார்பில் மது ஒழிப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையேற்று நடத்துகிறார்.

போராட்டத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர் '' என்று ஜி.கே.மணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x