Published : 03 Mar 2020 10:52 AM
Last Updated : 03 Mar 2020 10:52 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகன விபத்து; படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்தூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உடனடியாக மீட்டு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மதுரை திருநகரைச் சேர்ந்த கோமதிநாயகம் (85), இவரது பேரன் கிருஷ்ணன் கோவில் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். அவரைப் பார்க்க கோமதிநாயகம், தனது நண்பர் தேவராஜுடன் (67) மதுரையிலிருந்து காரில் நேற்று புறப்பட்டு கிருஷ்ணன்கோவில் வந்தார். காரை தேவராஜ் ஓட்டி வந்தார்.

மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அம் மாபட்டி விலக்கு அருகே டயர் திீடீரென வெடித்தது. இதில் நிலை குலைந்த கார் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த கோமதி நாயகமும், தேவராஜும் பலத்த காயமடைந்தனர். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை நோக்கி அமைச்சர் கே.டி. ராஜேந்தி ரபாலாஜி காரில் சென்றார். வழியில் விபத்து நடந்ததை பார் த்த அமைச்சர் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர், அரசு தலைமை மருத்துவர் காளிராஜிடம் காய மடைந்தவர்களின் நிலை குறித்து விசாரித்தார். விபத்து குறித்து நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x