Published : 27 Feb 2020 02:56 PM
Last Updated : 27 Feb 2020 02:56 PM

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு சென்னை நந்தனத்தில் வீடு ஒதுக்கீடு 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு சென்னை நந்தனம் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நல்லகண்ணு பல ஆண்டுகளாக சென்னை தியாகராயநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு, அந்த குடியிருப்பில் வசித்தவர்களை, காலி செய்ய அரசு உத்தரவிட்டது. நல்லகண்ணு தான் வாழ்ந்துவந்த வீட்டை காலி செய்தார்.

இருப்பினும், அக்குடியிருப்பில் பொது ஒதுக்கீட்டில் குடியிருப்போருக்கு வேறு வீடு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.

தற்போது, சென்னை நந்தனம் பகுதியில் நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணை வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x