Published : 27 Feb 2020 02:20 PM
Last Updated : 27 Feb 2020 02:20 PM

ஹாட் லீக்ஸ்: தள்ளி நிற்கும் தங்கவேலன் குடும்பம்

தொடர்ந்து 35 ஆண்டுகளாக தனது குடும்பத்துக்குள்ளேயே வைத்திருந்த ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் பதவி பறிபோனதில் இருந்து சுப.தங்கவேலனும், அவரது மகன்சுப.த.திவாகரனும் கட்சி நிகழ்ச்சிகளை விட்டு பெரும்பாலும் விலகியே நிற்கிறார்களாம். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கூட தங்கவேலன் குடும்பம் தலை காட்டவில்லையாம். இத்தனைக்கும், தங்கவேலன் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராகவும், திவாகரன் மாநில தீர்மானக்குழு துணைத் தலைவராகவும் இருக்கிறார்கள். இன்னமும் தலைமை மீது வருத்தத்தில் இருக்கும் சுப.தங்கவேலன், ``அந்தக் காலத்துல அண்ணாவை மாட்டு வண்டியில கூட்டிட்டு வந்து கட்சி வளர்த்தவன்யா நான்'' என்ற பழைய கதையையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.

- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 1, 2020)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x